பாம்பின் தலைக்கு தப்பி ...
ஏணியின் பின் ஓடி ....
சக மனிதன் முந்தியால் வருந்தி,பிந்தியால் மகிழ்ந்து,
ஓடி எத்தும்போது,
உச்சியில் தனியாய் நான்.....!!!
தொலைக்காட்சியில் உலககோப்பைக்காக போட்டி நடக்கிறது இந்தியா வும் இங்கிலாந்தும்
ஜன்னலின் வெளியே ஒரு எச்சல் இலை சோறுக்காக போட்டி நடக்கிறது சிறுவனும் நாயும்
யாருக்காக பிரார்த்திப்பது சிறுவனுக்கா இந்தியாவுக்கா
குழப்பத்தில் நான் !