Friday, September 2, 2011

நட்பு


சாலையில் நடந்து போகும் பெண்ணின் பின்னல் ,

வானொலியில் கேட்கும் ஏதோ ஒரு பாடல் ,

கடந்து போகும் சைக்கிள் மணி ஓசை ,

 பயணத்தில் கடக்கும் வீடு ,


 நினைவு அடுக்கில் மறைந்து கிடைக்கும்

தொலைந்து போன தோழியின் நினைவுகளை தட்டி எழுப்புகிறது

நட்பு தொலைந்து போகலாம்


ஆனால் ,
 
 நட்பின் அடையாளங்கள் என்றும் தொலைவதில்லை !!

Wednesday, March 23, 2011

உலககோப்பை

தொலைக்காட்சியில் உலககோப்பைக்காக போட்டி நடக்கிறது  இந்தியா வும் இங்கிலாந்தும்
ஜன்னலின் வெளியே ஒரு எச்சல் இலை சோறுக்காக போட்டி நடக்கிறது சிறுவனும் நாயும்
யாருக்காக பிரார்த்திப்பது  சிறுவனுக்கா இந்தியாவுக்கா
குழப்பத்தில் நான் !

Friday, November 5, 2010

தீபாவளி !!!

தீபாவளி இன்று .....
தம்பி கேட்டான் ஏன் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்தவில்லை என்று
சொன்னால் புரியுமா அவனுக்கு ... !!!
சாட்டையை கண்டால் பிஞ்சு விரல்கள் நியாபகம் வருகிறது ...
புஸ்வானம் கண்டால் புகை சுவாசிக்கும் பிஞ்சு முகம் நியாபகம் வருகிறது ...
மத்தாப்பு கண்டால் கந்தக கரை படிந்த கைகள் நியாபகம் வருகிறது ...

சங்கு சக்கரம் கண்டால் எண்சாண் வயிறுக்காய் கந்தக பூமியில் வேகும் பிஞ்சுகள் நியாபகம் வருகிறது ...
இங்கே  குழந்தைகள்  காசை கரி ஆக்குகிறது ....
அங்கே குழந்தைகள் கரியால் காசு ஆக்குகிறது ..
இங்கே குழந்தைகள் தீப திருநாளில் மாசு காற்றை சுவாசிக்கிறது
அங்கே குழந்தைகள் தீப திருநாளில் மட்டும் தான் நல்ல காற்றை சுவாசிக்கிறது
இறைவா ....என்று தீரும் இந்த சாபம்?

Thursday, July 15, 2010

கனவு உலகம்

ஆரோகியமான உணவு
சுகமான உறக்கம்
பாதுகாப்பான உறைவிடம்
மின் கருவிகளின் சத்தம் இல்லாத அறை
வாகனங்கள் மாசுபடுத்தாத சுற்றுபுறம்
போட்டி பொறாமை இல்லாத உலகம்
மானுடம் சாகாத வாழ்க்கை
அம்மாவின் கருப்பை !

கலப்படம் இல்லா அன்பு
கள்ளம் இல்லா நட்பு
களங்கம்  இல்லா சிரிப்பு
மனதை கொள்ளை கொள்ளும்  குறும்பு
குழந்தை மனது !!!

ஏ  கடவுளே .. வரம் தா .

என் குழந்தைக்கு நான் குழந்தை யாக !!

 

Thursday, May 27, 2010

பாரபக்ஷம்

இறைவா உன் படைப்பில் ஏன் இந்த பாரபக்ஷம் ??
ஆணும் பெண்ணும் சமம் என்று அர்த்தனாரியாக நின்றாய்
ஆனால் உனக்கும் தோன்றவில்லையே
ஆண் குழந்தையை ஆண் சுமக்கவும் பெண் குழந்தையை பெண் சுமக்கவும் ஆணையிட ?
இறைவன் ஆனாலும் ஆண் ஆண்தான் என்று நிருபித்து விட்டாயே ?

Saturday, April 3, 2010

சிகரட்

வீட்டின் தலை மகன் தனக்கு தானே கொள்ளி வைத்து கொள்கிறான் !
வாயில் சிகரட் !!!!!!!

Monday, March 29, 2010

என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம் !

இந்த பூமியில் பிறந்த போது அம்மாவின் கருப்பை பாதுகாப்பு முடிந்து போனதை நினைத்து பயம் !
மழலையாக இருந்த போது தாயின் பூச்சாண்டி கதைகளை
நினைத்து  பயம் !
பள்ளி பருவத்திலோ ஆசிரியை , மதிப்பெண்கள் ,  புத்தக சுமையை
நினைத்து பயம் !
கல்லூரி பருவத்தில் தோழிகள் பட்டாம்பூச்சியை திரைப்படம்,கேளிக்கை என இறக்கை விரித்து பறக்க ,
உனக்கு உன் தந்தை என்ன சொல்வரோ என்று
 நினைத்து பயம்!
நாளொரு பேஷன் , பொழுதொரு வண்ணமாய் கல்லூரி வண்ண மயமாய் இருக்க ,
சிறிய  பொட்டு வைக்க கூட தடை சொல்லும் தாயின் கண்டிப்பை
 நினைத்து பயம் !
அம்மாவை காண மனது துடித்தும் போகாதே என்று சொல்லும் கணவனை மீறி
போக முடியாத பயம் !
தோழியை தொலை பேசியில் அழைக்க நினைத்தாலும் கணவனின் பாராமுகம்
நினைத்து பயம் !
பல மாதங்கள் கழித்து உனக்கே உனக்காய் சில தருணங்களில் வெளியே செல்ல எல்லாவரிடமும் அனுமதி கேட்க பயம் !
நீ பிறந்ததில் இருந்து இன்று வரை
நீ மற்றவர்களுக்கு பயந்து பயந்து வாழ்கையின் பாதி தூரம் கடந்து விட்டாய் !
உன் வாழ்கையை இன்றும் மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள் !
எப்பொழுது  நீ உன் வாழ்கையை வாழ போகிறாய் ?????