Friday, November 5, 2010

தீபாவளி !!!

தீபாவளி இன்று .....
தம்பி கேட்டான் ஏன் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்தவில்லை என்று
சொன்னால் புரியுமா அவனுக்கு ... !!!
சாட்டையை கண்டால் பிஞ்சு விரல்கள் நியாபகம் வருகிறது ...
புஸ்வானம் கண்டால் புகை சுவாசிக்கும் பிஞ்சு முகம் நியாபகம் வருகிறது ...
மத்தாப்பு கண்டால் கந்தக கரை படிந்த கைகள் நியாபகம் வருகிறது ...

சங்கு சக்கரம் கண்டால் எண்சாண் வயிறுக்காய் கந்தக பூமியில் வேகும் பிஞ்சுகள் நியாபகம் வருகிறது ...
இங்கே  குழந்தைகள்  காசை கரி ஆக்குகிறது ....
அங்கே குழந்தைகள் கரியால் காசு ஆக்குகிறது ..
இங்கே குழந்தைகள் தீப திருநாளில் மாசு காற்றை சுவாசிக்கிறது
அங்கே குழந்தைகள் தீப திருநாளில் மட்டும் தான் நல்ல காற்றை சுவாசிக்கிறது
இறைவா ....என்று தீரும் இந்த சாபம்?

No comments:

Post a Comment