Wednesday, October 24, 2012

என் தேவதை

பெண்மையின்  பூரணம் நீ வந்ததும்  அடைந்தேன் !
பூமியில் சொர்க்கம் நீ தொட்டதும் அறிந்தேன் !
வாழ்க்கையின் முக்தி நீ சிரித்ததும் அடைந்தேன் !
நரகத்தின் வாசம் நீ அழுகையில் கண்டேன் !
உன் முத்தத்தின் மிச்சம் நிரந்தரம் என்னில் !
உன் நேசத்தின் வாசம் முகிழ்த்ததும் என்னில் !
உன் தழுவலின்  சுகம் விழுந்ததும்  என்னில் !
என் நட்பாய் , என் பகையாய் ,
என் சொர்கமாய்  ,என் நரகமாய்,
என் சேயாய்,என் தாயாய் ,
என் சிரிப்பாய் ,என் அழுகையாய் ,
என் தேவதையாய் ,என் ராட்சசியாய் ,
என் எல்லாம் எல்லாமாய்  இருப்பவளே .. ...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ....



No comments:

Post a Comment