Sunday, February 28, 2010

காலம்

மழையின் சாரல்
மழலையின் சிரிப்பு
மலரின் வாசம்
இவைகளை தேடி சந்தோஷித்தது பட்டாம்பூச்சி காலம் ....
சனியன் புடிச்ச மழை நேரம் காலமே தெரியாது - வாகனங்களின் அணிவகுப்பில் அலுவலக அவசரத்தில் நான் ...
விளையாட வாம்மா - என் மழலையின் கொஞ்சலான அழைப்பு
அலுவலக தொலை பேசி அழைப்பின் அவசரத்தில் நான்....
வீடு முழுவதும் பூத்திருக்கும் ரோஜாவின் வாசம்
வீடெல்லாம் ஒரே பூச்சி இந்த செடிய கொஞ்சம் வெட்டணும் ..
வீட்டை கவனிக்கவே நேரம் இல்லாத நான் .....
காலத்தின் மாற்றத்தில் நான் தொலைத்தது என் ஆசைகளையா ?
இல்லை என்னுள் இருந்த மனித உணர்வுகளையா
பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!!

1 comment:

  1. Oooops! suleer suleernnu kuthuthu un varikal...

    Enge odittirukkom...? Ethukkaga odittirukkom..? Yarukkaga odittirukkom?

    ReplyDelete