பள்ளி பெரியாரும் பாரதியும் அறிமுகம் செய்தது !
கல்லூரி பருவம் பெருமாள் அல்லா ஏசுவினைஅறிமுகம் செய்தது !
பணி உலகத்தினை அறிமுகம் செய்தது !
நான் இன மத ஜாதி மொழிக்கு அப்பாற்பட்டவள் என்று இறுமாதிருந்த வேளை
காளை வந்தது!!
என் மாயை சென்றது!
இத்தனை அழகாய் தமிழ் முழக்கம் கேட்டதில்லை
இத்தனை அமைதியாய் ஆர்பாட்டங்கள் பார்த்ததில்லை
இத்தனை ஆரவாரமாய் ஊர்வலங்கள் சென்றதில்லை
இத்தனை பேரலையாய் மக்கள் சக்தி கண்டதில்லை
இத்தனை அழாகாய் மானுடம் கண்டதில்லை!!!
இனம் மதம் ஜாதி வயது பால் கடந்து ஒரே அடையாளம்!! த. மி. ழ் !!!!!
தமிழச்சி என்ற அடையாளத்தில் பெருமை கொள்கிறேன்!!!
No comments:
Post a Comment